கோவை மதுக்கரை பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கலைஞர் 99-வது பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை மதுக்கரை பகுதியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கலைஞர் 99-வது பிறந்தநாள் விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையேற்றார்.
விழாவில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், சவரம் பொருட்கள், மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலி, தள்ளுவண்டி, அரசி மூட்டைகள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதல் கையெழுத்தும் தேர்தல் வாக்குறுதியான குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.
மொத்த வாக்குறுதிகளில் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 75-சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் முன்னோடி முதல்வராக திகழ்ந்து வருவதாக புகழாரம் சூட்டினார்.
மேலும்இந்த மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 4-ஆயிரம் இடங்களில் கலைஞர் திரு உருவ படத்திற்கு மலர் மரியாதை செய்யவுள்ளதாகவும், 400-இடங்களில் தெருமுனை கூட்டங்கள் மற்றும் 10- தொகுதிகளில் திராவிடல் மாடல் பயிற்சி பயிலரங்கம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக கோவை மதுக்கரை பகுதியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கலைஞர் 99-வது பிறந்தநாள் விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையேற்றார்.
விழாவில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், சவரம் பொருட்கள், மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலி, தள்ளுவண்டி, அரசி மூட்டைகள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதல் கையெழுத்தும் தேர்தல் வாக்குறுதியான குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.
மொத்த வாக்குறுதிகளில் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 75-சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் முன்னோடி முதல்வராக திகழ்ந்து வருவதாக புகழாரம் சூட்டினார்.
மேலும்இந்த மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 4-ஆயிரம் இடங்களில் கலைஞர் திரு உருவ படத்திற்கு மலர் மரியாதை செய்யவுள்ளதாகவும், 400-இடங்களில் தெருமுனை கூட்டங்கள் மற்றும் 10- தொகுதிகளில் திராவிடல் மாடல் பயிற்சி பயிலரங்கம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.