சம்பவம் தொடர்பாக, கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையத்தை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே சிலிண்டர்களைஏற்றி வந்த லாரி மோதி, பைக்கில் சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியை சேர்ந்தவர் சண்முகம் வயது (70)இவர் ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழியர் ஆவார். இவர் நேற்று மாலை தனது மொபட்டில் கோவை அருகே உள்ள சூலூர்இந்திய விமானப்படை குடியிருப்பில் வசிக்கும் தனது மகன் மணி (42) என்பவர் புது வீடு கட்டி வருகிறார்.
அந்த வீட்டை பார்வையிடுவதற்காக பைக்கில் திவான்சா புதூரில் இருந்து கிளம்பினார். கிணத்துக்கடவு- கோவைநான்கு வழி சாலையில் உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த சமையல் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி சண்முகம் வந்த பைக் மீது மோதியது . இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று.
விபத்தில் பலியான சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியை சேர்ந்தவர் சண்முகம் வயது (70)இவர் ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழியர் ஆவார். இவர் நேற்று மாலை தனது மொபட்டில் கோவை அருகே உள்ள சூலூர்இந்திய விமானப்படை குடியிருப்பில் வசிக்கும் தனது மகன் மணி (42) என்பவர் புது வீடு கட்டி வருகிறார்.
அந்த வீட்டை பார்வையிடுவதற்காக பைக்கில் திவான்சா புதூரில் இருந்து கிளம்பினார். கிணத்துக்கடவு- கோவைநான்கு வழி சாலையில் உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த சமையல் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி சண்முகம் வந்த பைக் மீது மோதியது . இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று.
விபத்தில் பலியான சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.