கோவை கிணத்துக்கடவு அருகே லாரி மோதி பைக்கில் சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலி..!

சம்பவம் தொடர்பாக, கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையத்தை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே சிலிண்டர்களைஏற்றி வந்த லாரி மோதி, பைக்கில் சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியை சேர்ந்தவர் சண்முகம் வயது (70)இவர் ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழியர் ஆவார். இவர் நேற்று மாலை தனது மொபட்டில் கோவை அருகே உள்ள சூலூர்இந்திய விமானப்படை குடியிருப்பில் வசிக்கும் தனது மகன் மணி (42) என்பவர் புது வீடு கட்டி வருகிறார்.

அந்த வீட்டை பார்வையிடுவதற்காக பைக்கில் திவான்சா புதூரில் இருந்து கிளம்பினார். கிணத்துக்கடவு- கோவைநான்கு வழி சாலையில் உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த சமையல் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி சண்முகம் வந்த பைக் மீது மோதியது . இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று.

விபத்தில் பலியான சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...