கோவையில் 13 சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை - பெயிண்டர் போக்சோவில் கைது.…!

சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த 18 வயதான வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை அளித்த பெயிண்டிங் வேலை செய்து வந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அளித்தனர்.

கோவையில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும் கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பஷீர் (19) என்ற பெயிண்டிங் வேலை செய்து வந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பஷீர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியை காணவில்லை என கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, மகளிர் காவல் ஆய்வாளர், தவ்லத் நிஷா விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தார்.

விசாரணையில், சிறுமியை பஷீர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்யாமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.



இதையடுத்து, பஷீர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...