சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த 18 வயதான வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை அளித்த பெயிண்டிங் வேலை செய்து வந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அளித்தனர்.
கோவையில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும் கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பஷீர் (19) என்ற பெயிண்டிங் வேலை செய்து வந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பஷீர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியை காணவில்லை என கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, மகளிர் காவல் ஆய்வாளர், தவ்லத் நிஷா விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தார்.
விசாரணையில், சிறுமியை பஷீர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்யாமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பஷீர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கும் கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பஷீர் (19) என்ற பெயிண்டிங் வேலை செய்து வந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பஷீர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியை காணவில்லை என கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, மகளிர் காவல் ஆய்வாளர், தவ்லத் நிஷா விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தார்.
விசாரணையில், சிறுமியை பஷீர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்யாமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பஷீர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.