கோவை வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே. பாலு பொறுப்பேற்பு..!

வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையரை, நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.


கோவை: வால்பாறை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 நகராட்சிகளின் ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பான உத்தரவை நகராட்சி நிா்வாக ஆணையா் பொன்னையா பிறப்பித்தாா்.

அதன்படி, வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையராக கே.பாலு பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார், திருச்சி மாவட்டம், துறையூருக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கே.பாலு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

லமயிலாடுதுறையில் இருந்து மாற்றலாகி வந்துள்ள புதிய ஆணையரை, நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.



வால்பாறை நகர மன்ற தலைவர், அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன், 8-வது வார்டு உறுப்பினர் இந்துமதி 16-வது வார்டு உறுப்பினர் கீதா ஆகியோர் பொன்னாடை அணிவித்து புதிய ஆணையரை வரவேற்றனர்.





Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...