கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 மில்லியன் யூனிட் மின்சாரம் அதிகம் கிடைத்துள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் 2000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 2,000 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே கடந்த மார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IWPA) தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:

தமிழகத்தில் தினசரி மின் தேவை 15,000 மெகாவாட் ஆக உயர்ந்துள்ள நிலையில் காற்றாலைகள் சீசன் தொடங்கியுள்ள காரணத்தால் தினசரி மின் நுகர்வில் காற்றாலைகள் அதிக பங்களிப்பு செய்து வருகின்றன. குறிப்பாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் 1,910 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் அதிகம் கிடைத்துள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் அதிக காற்று வீசும் என்ற காரணத்தினால் தினசரி மின் நுகர்வில் காற்றாலை மின் உற்பத்தியின் பங்கு தொடர்ந்து அதிகரிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே கடந்த மார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக மின் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IWPA) தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:
தமிழகத்தில் தினசரி மின் தேவை 15,000 மெகாவாட் ஆக உயர்ந்துள்ள நிலையில் காற்றாலைகள் சீசன் தொடங்கியுள்ள காரணத்தால் தினசரி மின் நுகர்வில் காற்றாலைகள் அதிக பங்களிப்பு செய்து வருகின்றன. குறிப்பாக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் 1,910 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் அதிகம் கிடைத்துள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் அதிக காற்று வீசும் என்ற காரணத்தினால் தினசரி மின் நுகர்வில் காற்றாலை மின் உற்பத்தியின் பங்கு தொடர்ந்து அதிகரிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.