கோவை சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குறுதி..!

அப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார்.


கோவை: சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

விளாங்குறிச்சி ரோடு, சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா. ஆர் கிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.

இருப்பினும் சமீபத்தில் மீண்டும் அந்த இடத்தில் மதுபான கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



இன்று கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா. ஆர் கிருஷ்ணன், கோவை மாநகராட்சி 22-வது மாமன்ற உறுப்பினர் கோவை பாபு அவர்கள் தலைமையில் 22-ஆவது வார்டுக்குட்பட்ட ஶ்ரீ விக்னேஷ் நகர், குமுதம் நகர், டீச்சர்ஸ் காலனி, சக்தி விநாயகர் நகர், ஶ்ரீ சிவசக்தி அவென்யூ, இராகவேந்திரா அவென்யூ, எஸ்.ஆர்.அவென்யூ, ஜே.பி.அவென்யூ, ஶ்ரீ காஞ்சி நகர், கோப்ரேடிவ் காலனி, சேரன் மாநகர், உள்ளிட்ட குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைச் சந்தித்து 22-ஆவது வார்டு பகுதியில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையினை திறக்க வேண்டாம் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.



அப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...