அனுமதி இல்லாமல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்:தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சியினர் திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரின் பிரதானதொழிலான பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் நூல். நூலின் விலை கடந்த 20 மாதங்களாக உயர்ந்தவாறே உள்ளது. தொழில்துறையினரின் பலகட்ட கோரிக்கைகளுக்கு பிறகு நூலின் இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.
அதன்பிறகும் நூலின் விலை குறையாமல் உயர்ந்தது. இந்நிலையில் நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழில்துறை சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் இன்று , நூலின் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து SDPI சார்பில் இன்று திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.சுமார் 50 க்கும் மேற்பட்டோர் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ரயில் நிலைய நுழைவாயில் வந்து, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தள்ளி உள்ளே நுழைந்து ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராககோஷங்கள் எழுப்பினர்.

பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பஞ்சு பதுக்கலை கண்டறிந்து தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியவாறு சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
அனுமதி இல்லாமல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூரின் பிரதானதொழிலான பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் நூல். நூலின் விலை கடந்த 20 மாதங்களாக உயர்ந்தவாறே உள்ளது. தொழில்துறையினரின் பலகட்ட கோரிக்கைகளுக்கு பிறகு நூலின் இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.
அதன்பிறகும் நூலின் விலை குறையாமல் உயர்ந்தது. இந்நிலையில் நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி தொழில்துறை சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் இன்று , நூலின் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து SDPI சார்பில் இன்று திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.சுமார் 50 க்கும் மேற்பட்டோர் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ரயில் நிலைய நுழைவாயில் வந்து, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தள்ளி உள்ளே நுழைந்து ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராககோஷங்கள் எழுப்பினர்.
பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பஞ்சு பதுக்கலை கண்டறிந்து தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியவாறு சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
அனுமதி இல்லாமல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.