சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த  ஐந்து பேர் பலி.




பொள்ளாச்சி கோட்டாம்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் நடராஜ் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்.  இவரது மகன் திருமுகருகன் மகள் ஜெயலட்சுமி மருமகன் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேர் குடும்பத்துடன் கடந்த 26 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் சென்று விட்டு நேற்றிரவு அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். காரை ஆனந்த கிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார்.

இன்று அதிகாலை பொள்ளாச்சி உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி எதிர்பாராத விதமாக விபத்து ஏற்ப்பட்டது. விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆனந்த கிருஷ்ணன் நடராஜ் இருவருவரும் உயிரிழந்தனர். திருமுருகன் ஜெயலட்சுமி  ஸ்ரீநிதி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமணையில் சிகிச்சைபாலனிற்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பிரியா, சிறுவன் தர்ஷன், சிறுமி சாகித்யா உள்ளிட்ட மூன்று பேர் கோவை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டி வந்த ஆனந்த கிருஷணன் தூக்கத்தில் இருந்தபடி, காரை ஓட்டியதால்  இந்த கோர விபத்து ஏற்ப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம்குறித்து கோமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரே குடும்பத்தைசேர்ந்த ஐந்து பேர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...