காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.


கோவை: மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதனை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவினர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடையோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை மாநகரில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திமுகவினரிடமிருந்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன், “மயிலாடுதுறையில் தாக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி தவெக வுக்கு ஆதரவு அளித்த சூழலில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.

எனவே, இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...