கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறையை மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்


கோவை தாஜ் ஹோட்டலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றுத்துறை சார்பாக கட்டிடக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாகவும், கட்டிடக் கழிவு மேலாண்மை தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறையை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை, உக்கடம் பகுதியில் ரூ.9 கோடி மதிப்பில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவிலான கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய ஆலையினை தமிழ்நாடு முதலமைச்சரால் மார்ச் 18ம் தேதியன்று அடிக்கல் நாட்டி திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. குறிப்பாக, பொதுமக்கள் வீடுகள் கட்டும் பொழுதும் மற்றும் வீடுகள், கட்டிடங்கள் இடிக்கும் பொழுதும் கட்டிட கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதை தவிர்ப்பதற்காக இத்திட்டம் பொதுமக்களின் சேவைக்காக துவக்கப்பட்டது.

இக்கட்டிட கழிவுகளை கொண்டு மறுசுழற்சியாக செங்கல்கள், பேவர் பிளாக்ஸ் மற்றும் எம்-சேன்ட் போன்றவற்றை தயார் செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும், உக்கடம் பகுதியில் கட்டிடக் கழிவுகளை கொண்டு மறுசுழற்சி செய்யக்கூடிய இந்த ஆலையானது தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஆலையாகும். குறிப்பாக இந்த கட்டிடக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்காக மாநகராட்சியால் 17 இடங்களை சேகரிக்கும் மையங்கள் கண்டறியப்பட்டு கட்டிடக்கழிவுகளை சேகரிப்பதற்காக செயல்படுத்தவுள்ளது.

மேலும், இதனைத் தொடர்ந்து இன்று கோவை தாஜ் ஹோட்டலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றுத்துறை சார்பாக கட்டிடக் கழிவுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாகவும், கட்டிடக் கழிவு மேலாண்மை தொடர்பான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.



இந்த ஒருநாள் பயிற்சி பட்டறையானது பல்வேறு மாநகராட்சியிலிருந்தும், நகராட்சியிலிருந்தும் வந்திருக்கும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு கட்டிடக்கழிவுகளை சிறப்பான முறையில் மறுசுழற்சி செய்து பயன்பெறுவதற்காக மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் ஜெர்மன் டெவலப்மென்ட் கார்ப்பரேசன் திட்ட இயக்குனர் உவே பெக்கர், தொழில்நுட்ப ஆலோசகர் அபிஜித் பேனர்ஜி, புதுதில்லி டெவலப்மென்ட ஆல்டர்நெட்டிவ்ஸ், சுற்றுச்சூழல் தண்ணிரைவு மேலாளர் கிருஷ்ணா சந்திரன், சுற்றுச்சூழல் பொறியாளர்; புதுதில்லி அச்சு ஆர்.சேகர், மாநகராட்சி செயற்பொறியளர் (பொ) கே.சரவணகுமார், மண்டல உதவி ஆணையர்கள், மண்டல துப்புரவு அலுவலர்கள், பல்வேறு நகராட்சிப் பொறியாளர்கள், கட்டிட வல்லுனர்கள், பல்வேறு கட்டுமானத்துறை சார்ந்த உறுப்பினர்கள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...