கோவையில் நடைபெறும் 17வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் கண்காட்சியில் 600 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் - இண்டெக் தலைவர் சுந்தரம்

17-வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி வரும் ஜூன் 1ம் தேதி முதல் முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கண்காட்சி தொடர்பாக இண்டெக் தலைவர் சுந்தரம் கூறும்போது, ஜூன் 1- ம் தேதி துவக்க விழாவில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். வர்த்தகர்களுக்கான பார்வை நேரம் காலை 10 முதல் 2 மணி வரையும் பொதுமக்கள் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

22000 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரங்குகள் அமைக்கபட்டு 536 நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் துறையினர் இந்த சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 50,000 வர்த்தக பார்வையாளர்கள் இக்கண்காட்சிக்கு வருகைதருவர் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 375 கோடி வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு 600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இயந்திர உற்பத்தியில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் முன்னிலையில் உள்ளன. அந்த நாடுகள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்சாலைகளை இந்தியாவில் துவக்கி வருகிறது. இந்தியாவில் ரோபோட்டிக்ஸ் தயாரிப்பு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்கு பின் தற்போது தொழில்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் புதிய தொழில் துறையினர் 40 பேர் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தனி அரங்கு ஒதிக்கீடு செய்யபட்டுள்ளது. தற்போது தொழில் துறையினர் தொழில் துவங்க மூப்பேரிபாலையம் பகுதியில் 240 ஏக்கர் பரப்பளவிலும், செட்டிபாளையம் பகுதியில் 150 ஏக்கர் அளவில் தொழிற்பேட்டையும் அமையவுள்ளது. இதில், 300 தொழிற்சாலைகள் துவங்கபட்டு 12000 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொழிற்பேட்டைகள் துவங்கப்பட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...