கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வின்போது டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டதால் கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண் 8-ல் அமைந்துள்ள காளப்பட்டி பிரதான சாலை, மோகன் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, கட்டிட வளாகத்தில் தேங்கியிருந்த நீரில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன. டெங்கு நோய் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததற்காக, கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி சார்பில் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் கட்டிட வளாகங்களில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தேங்கிய நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு இனப்பெருக்கம் தடுப்பதற்காக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரமற்ற சூழலை உருவாக்கும் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், குப்பைகளை சரியான முறையில் அகற்ற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...