கோவையில் நடைபெறும் 17வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் கண்காட்சியில் 600 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் - இண்டெக் தலைவர் சுந்தரம்

17-வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி வரும் ஜூன் 1ம் தேதி முதல் முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கண்காட்சி தொடர்பாக இண்டெக் தலைவர் சுந்தரம் கூறும்போது, ஜூன் 1- ம் தேதி துவக்க விழாவில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். வர்த்தகர்களுக்கான பார்வை நேரம் காலை 10 முதல் 2 மணி வரையும் பொதுமக்கள் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

22000 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரங்குகள் அமைக்கபட்டு 536 நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் துறையினர் இந்த சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 50,000 வர்த்தக பார்வையாளர்கள் இக்கண்காட்சிக்கு வருகைதருவர் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 375 கோடி வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு 600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இயந்திர உற்பத்தியில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் முன்னிலையில் உள்ளன. அந்த நாடுகள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்சாலைகளை இந்தியாவில் துவக்கி வருகிறது. இந்தியாவில் ரோபோட்டிக்ஸ் தயாரிப்பு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்கு பின் தற்போது தொழில்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் புதிய தொழில் துறையினர் 40 பேர் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தனி அரங்கு ஒதிக்கீடு செய்யபட்டுள்ளது. தற்போது தொழில் துறையினர் தொழில் துவங்க மூப்பேரிபாலையம் பகுதியில் 240 ஏக்கர் பரப்பளவிலும், செட்டிபாளையம் பகுதியில் 150 ஏக்கர் அளவில் தொழிற்பேட்டையும் அமையவுள்ளது. இதில், 300 தொழிற்சாலைகள் துவங்கபட்டு 12000 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொழிற்பேட்டைகள் துவங்கப்பட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...