சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு


கோவை சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்: 1531) அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அன்னை கஸ்தூரிபா மகளிர் நுகர்வோர் அமைப்பு அளித்துள்ள மனுவில், குடியிருப்புகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் நிறைந்த பகுதி கோவை சிவானந்தா காலனி. இப்பகுதியில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை (எண்: 1531) செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு வரும் மது பிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் செல்லும் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். மேலும், இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள சாலையைக் கடந்தே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

மேலும், சாலையோரம் நிற்கும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அமர்ந்தும் மது அருந்தி வருகின்றனர். இதனால், பெண்கள் வெளியில் செல்வே முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் இருந்தபோது மனு அளித்தோம். மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய ஆட்சியர் உறுதியளித்தார். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. 

கோவை மாவட்ட அட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...