சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி, மத்திய அரசின் கொள்கைகள் சாமானிய மக்களை பாதிப்பதாக குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதால்,சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.



திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபால்சாமி தலைமையில், நல்லூர் பகுதியில் தொடங்கிய பிரச்சாரத்தில், ஒன்றிய அரசின் விலை உயர்வு கொள்கைகள் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாகவும்,

பாஜக அரசு நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகபொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நல்லூரில் தொடங்கிய இந்த தெருமுனைப் பிரச்சாரம் காங்கேயம் சாலை, பழைய பேருந்து நிலையம், ராயபுரம், ரயில் நிலையம் மற்றும் மன்னரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...