சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி, மத்திய அரசின் கொள்கைகள் சாமானிய மக்களை பாதிப்பதாக குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதால்,சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.



திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபால்சாமி தலைமையில், நல்லூர் பகுதியில் தொடங்கிய பிரச்சாரத்தில், ஒன்றிய அரசின் விலை உயர்வு கொள்கைகள் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாகவும்,

பாஜக அரசு நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகபொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நல்லூரில் தொடங்கிய இந்த தெருமுனைப் பிரச்சாரம் காங்கேயம் சாலை, பழைய பேருந்து நிலையம், ராயபுரம், ரயில் நிலையம் மற்றும் மன்னரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...