கல்லூரி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி பாஜக இளைஞர் அணியினர் ஆட்சியரிடம் மனு

கல்லூரி பகுதியில் அதிகளவில் நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி பாஜக இளைஞர் அணியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கல்லூரிகள் நிறைந்த இப்பகுதிகுயில் அதிகளவிலான கஞ்சா விற்பனைகளும் நடைபெற்று வருகிறது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. 

இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும், ரோந்து என்ற பெயரில் சென்று சிலரை கைது செய்து பின் விடுவித்து விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்து தங்களது கஞ்சா விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மாதம்பட்டி- காலபாளையம் சாலையிலும் சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...