உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


கோவை: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வணிக வரித்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்போது, புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சமூக சீர்கேடுகள் மற்றும் அனைத்து வகையான புகையிலைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த விளையாட்டு மற்றும் தடகள வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், புகையிலை ஒழிப்பு குறித்த கையெழுத்து விழிப்புணர்வு இயக்கமும் நடத்தப்பட்டது.

புகையிலை இல்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

சமூக நலன், பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...