விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாக மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாகவும், வராகடன் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி அளித்துள்ளார்.

விஜயா வங்கியின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி இன்று அவிநாசி சாலையில் உள்ள விஜயா வங்கி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், வங்கியின் வளர்ச்சியில் வீட்டுக் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போது புதிதாக 168 கிளைகள் திறக்கபட்டுள்ளது. மேலும் கிளைகள் துவக்க வங்கி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பனியன் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள திருப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பலன் பெறும் வகையில் கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாய கடன்களைப் பொருத்த வரையில் பண தேவைக்காக அதிக வட்டியில் வெளியாட்களிடம் கடன் பெற்றவர்களுக்கு பத்திரத்தை மீட்டு 8 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதம் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன்கள் விஜயா வங்கி வழங்குகிறது. மேலும் வங்கி தொழில்துறையினர், கல்வி கடன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தபடுகிறது. கடந்த சில மாதங்களில் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...