மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் கைது

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கோதாபாளையம் பகுதியில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகசாமி என்பவர் இப்பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார்.

இப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ரம்யா என்ற மாணவி கடந்த 13 ஆண்டுகளாக இப்பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை ரம்யா கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், பள்ளியின் தாளாளர் முருகசாமி தனக்கு மதுவை கொடுத்து கற்பழித்ததாகவும், இதனால், கருவுற்ற தன்னை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அறங்காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.

ரம்யாவுடன் சேர்ந்து, சுமதி என்ற பெண்ணும் முருகசாமி மீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக, கருமத்தம்பட்டி போலீசார் முருகசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பள்ளியின் அறங்காவலர் சித்ராதேவி, மேற்பார்வையாளர் ராணி, விடுதி காப்பாளர் பரிமளா, ரேவதி மற்றும் பாபு ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இதில், ராணி என்பவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இன்று சூலூர் தாசில்தார் பழனி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளை ஆசிரியர் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...