கழிவு பஞ்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் சூலூர் செம்மாண்டம்பாளையம் பஞ்சாயதிற்கு உட்பட்ட குறுக்குபாலையம் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள கழிவு பஞ்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக தெரிவித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்து வருவதாகவும் அப்பகுதியில் அமைந்துள்ள கழிவு பஞ்சு மற்றும் பனியன் வேஸ்ட் மூலம் மாவு போல் அரைக்கபட்டு பஞ்சாக்கும் ஆலைகளால் கரும்புகை ஏற்பட்டு அதன் துகள்களால் விவசாய நிலங்கள் மாசுபடுவதாக குற்றம் சாட்டியவர்கள் இந்த ஆலைகள் கட்டிட அனுமதி மாசு கட்டுபாட்டு அனுமதியின்றி இயங்கி வருவதாக குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனுமதியின்றி செயல்படும் இந்த ஆலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...