சகோதரத்துவக் கோப்பைக்கான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் கோவை மற்றும் தஞ்சாவூர் அணிகள் வெற்றி!


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)-வின் விளையாட்டு பிரிவான டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (TFSC) சார்பாக கோவையில் 'சகோதரத்துவக் கோப்பை 2017' எனும் தலைப்பில் மாபெரும் கால்பந்து மற்றும் கைப்பந்து  போட்டிகள் மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் குனியமுத்தூர் நூர்சேட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 



பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; 'சகோதரத்துவக் கோப்பை 2017' என்னும் இந்த விளையாட்டின் மூலம் அனைவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர். விளையாட்டின் மீது உங்களுக்கு எந்த அளவு ஆர்வம் உள்ளதை போன்று உங்கள் வாழ்விலும் ஆர்வம் காட்ட வேண்டும். விளையாட்டில் உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதைவிட அவர்கள் மீது நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். இந்த சகோதரத்துவ போட்டியின் மூலம் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருப்பது போல் வாழ்க்கையிலும் அனைவரும் இதுபோன்றே சகாதரத்துவத்துடன் இருந்து சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.



இதில், தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து  50 அணிகள் போட்டியில் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரொக்கமாக ரூபாய் 38,000 வழங்கப்பட்டது. கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000 கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 8,000 மற்றும் கோப்பைகள் சிறப்பு விருந்தினர் வழங்கினார். இரண்டாம் பரிசாக ரூபாய் 5,000. மூன்றாம் பரிசாக ரூபாய் 3,000 மற்றும் நான்காம் பரிசாக ரூபாய் 2,000 வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், என்.எஸ் குரூப் நிறுவனத்தின் தலைவர் கமாலுதீன், நூர்சேட் மேல்நிலைப்பள்ளி செயலாளர் இம்ரான்கான், ஜாமத்தே ஹி இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் இப்ராஹிம், ஜாமத்தே ஹி இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், தமிழக டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் மற்றும் டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஷேய்க் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...