சூலூரில் திடீர் வாகன சோதனை: 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிப்பு

கோவை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனை நடத்தினர். சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் பகுதிகளில் நேற்று (அக்டோபர் 4) இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, வாகன எண்கள், வாகனத்துக்கான சான்றிதழ்கள், ஹெல்மெட் அணிந்து வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கிறார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதிகளில் உள்ள சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த திடீர் வாகன சோதனையின் போது, ஆவணங்கள் இன்றி பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகன ஓட்டிகள் அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...