மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்தும் கோவையில் பசுமை மாரத்தான் போட்டி!

முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து பசுமை மாரத்தான் போட்டியை நடத்தினர். மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி நடைபெற்றது. கோவை பந்தய சாலையில் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். 



பசுமை மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக தனித் தனியாக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 13 வயதிற்குட்பட்டோருக்கும், 13 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என போட்டிகள் இரு பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாம் பரிசாக ரூபாய் 2000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.



இதில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள் தமிழ்மகன், அசோக்குமார், நிர்வாஸ், பிரகாஷ், ஆனந்த், சுதன் மற்றும் முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...