சிட்கோ பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- தண்ணீரின்றி தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்



கோவை சிட்கோ பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகின. அடுத்தடுத்து மேலும் இரண்டு கம்பெனிகளுக்கு பரவிய தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நூர் அகமது என்பவருக்கு சொந்தமான வின் பிளாஸ்டிக் என்ற வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் முன்பாக இருந்த டிரான்ஸ்பார்மில் ஒரு காகம் அடிபட்டதால், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிற்சாலையில் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்தது.

இதில் பிளாஸ்டிக் பொருட்கள், உருக்கு இயந்திரம், அச்சு இயந்திரம் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின.  இந்த பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகின. மேலும் பிளாஸ்டிக் தொழிற்சாலை கட்டிடமும் சேதமடைந்தது. உரிமையாளர் நூர் அகமதின் பார்ட்னர் ஒருவரின் மகன் திருமணத்திற்காக தொழிலாளர்கள் சென்று விட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள டேப் கம்பெனி மற்றும் மெத்தை கம்பெனிகளுக்கும் பரவியது.

இந்த தீயை 3 தீயணைப்பு லாரிகளில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு லாரிகளில் போதியளவு தண்ணீர் கொண்டு வரவில்லை எனவும், இதன் காரணமாக தீயணைப்பு பணிகள் தாமதமாக நடந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த தீ விபத்து குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...