சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்த தன்னார்வலர்கள்



கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களிடையே கோவை மாநகர காவல்துறையினர்  பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இவர்களுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோவை பிரதான சாலையான லட்சுமி மில்ஸ் சிக்கனலில் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் எஸ்.என்.ஆர் கல்லூரி மாணவர்கள், சாலை நண்பர்கள், 'எஜூதர்மா' அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் 'ஷாப்த்ரூ' செயலியின் நிறுவனர்களும் கலந்து கொண்டு  வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். 



மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்தும், காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட் அணிவது குறித்தும் மற்றும் மது அருந்திவிட்டு பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சாலையில் நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...