பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து - பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழக வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், இதில் வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் பயணமாக வருகின்ற 10ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர இருந்தார். சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 11 ம் தேதி கோவையில் நடைபெறும் அமித்ஷா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கோவை வந்தார்.

இந்நிலையில் திடீரென அமித்ஷாவின் தமிழக வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கிளம்பும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராசன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமித்ஷா வருகை அலுவல் காரணமாக இரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், வேறு எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விரைவில் அமித்ஷாவின் தமிழக வருகை தேதி அறிவிக்கப்படுமெனவும், அப்போது பிரம்மாண்ட முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். 

மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

மேலும் மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள், பாதிக்கப்படும் ஏழை நோயாளிகள் பற்றி கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். தமிழக அமைச்சர் காமராஜ் மீது வழக்குபதிவு செய்ய உச்சநீதிமன்றம்  உத்தவிட்டும், வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீதியை யாரும் மீறக்கூடாது எனவும், நீதிக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நீதியின் படி தமிழகத்தில் அனைத்தும் நடக்கிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், இதனை தமிழக முதலமைச்சர்கவனிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...