நிர்பயா வழக்கில் நால்வருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நண்பருடன் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

பெண்ணியத்தின் குரல்வளையை நசுக்கும் விதமான இந்த கோர சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து, மக்களின் மனதில் எழுச்சி தோன்றி பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது. கொலை செய்யப்பட்ட மாணவியின் பெயருக்கு பதிலாக இந்த வழக்கிற்கு நிர்பயா என்று பெயரிடப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பத்தை அரங்கேற்றிய அந்த 6 பேருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று பல்வேறு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இக்கொலை தொடர்பாக 18 வயதான சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்த 5 நபர்களின் முக்கிய குற்றவாளியான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 4 பேருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கடந்த 2014 டெல்லி உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது. 

இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று மதியம் 2 மணியளவில் வெளியிட்டனர். அதில், நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒன்று என்றும், குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களும், சாட்சியங்களும் பலமாக உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இது காட்டுமிராண்டித்தனமான படுகொலை என்று கூறி, 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...