கோவையில் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பேரில் மோசடி செய்த மூவர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சமையல் எண்ணெய் நிறுவனத்தின் கணக்காளர் நாகராஜ்  கோவை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கோவையில் சிலர் மலிவு விலைக்கு சமையல் எண்ணெய் வாங்கி அதை டின்களில் அடைத்து, அதில் தங்கள் சமையல் எண்ணெய் நிறுவனத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி விற்பனை செய்வதாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அனந்த ராஜ் (35), சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் (35) மற்றும் விவேகானந்தன் (35) ஆகிய மூவரும் முறைகேடாக சமையல் எண்ணெய் விற்பது தெரிவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 200 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...