கோவையில் 2017ம் ஆண்டின் அரிமா சங்கத்தின் 8வது கூட்டு மாவட்ட மாநாடு

தமிழகத்தில் பணியாற்றி வருகின்ற அரிமா சங்கம் 324 கூட்டு மாவட்டம், 12 மாவட்டங்களைக் கொண்டு சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. இந்த இயக்கத்தின் மிகப்பெரிய மாநாடாக 2017-ம் ஆண்டின் அரிமா சங்கம் சார்பில் 8-வது கூட்டு மாவட்ட மாநாடு வருகின்ற மே மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.



இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிமாக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பன்னாட்டு இயக்குநர் தொழிலதிபர் அரிமா ஜி.ராமசாமி அகில உலக அரிமா இயக்கத்தின் 3வது உதவி தலைவராக முன்மொழிவு செய்து தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு இயக்குநர்கள் அரிமா தனபாலன், அரிமா விஜயகுமார் ராஜு மற்றும் கெளரவ விருந்தினர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குநர் சங்கர், அரிமா ராமகிருஷ்ணமூர்த்தி, அரிமா நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில், எதிர்வரும் அரிமா ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்புகள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. மேலும் 2018- 2020ம் ஆண்டிற்கான பன்னாட்டு இயக்குநர் தேர்வுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. கூட்டு மாவட்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா பாலாஜி ரத்தினம் தலைமை வழிகாட்டுதலின் படி, மாநாட்டுத் தலைவர் அரிமா நௌரத்தன்மல் சாங்கலா மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...