இந்திய இராணுவ வீரர்களைக் கொன்ற பாகிஸ்தானைக் கண்டித்து அந்நாட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

பாகிஸ்தான் இராணுவத்தால் இராணுவ வீரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பாகிஸ்தான் நாட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இறந்த இராணுவ வீரர்களான நயிப் சுபேதர் பரம் ஜித் சிங் மற்றும் பிரேம் சாகர் ஆகிய இருவரின் உடல்கள் சிதைக்கபட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் இந்த கொடூர செயலிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் பாகிஸ்தான் கொடி எரிப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியினை கீழே வீசி காலில் மிதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அந்தக் கொடியினை எரிக்கவும் அவர்கள் முயன்றனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...