பத்திரிகை சுதந்திர தினம் இன்று...

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றழைக்கப்படும் பத்திரிகை துறையின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-ம் நாள் சர்வதேச பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், அரசின் குறைகளையும் மற்றும் மக்களின் தேவைகளையும் எழுத்தின் மூலமாக சுட்டிக்காட்டி அதற்கான தீர்வை பெறுகின்ற உன்னத பணியை மேற்கொள்ளும் ஒருவரே உண்மையான பத்திரிகையாளராகிறார்.

அவ்வாறு பத்திரிகையாளர் ஒருவர் நிதர்சனங்களை எழுதும் பொழுது அவருக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் எழுவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் நாள் கொலம்பிய பத்திரிகையாளர் கிலேர்மோ கானோ இசாசா என்ற பத்திரிகையாளர் ஒருவர், அவரது அலுவலத்தின் முன்பு சமூக விரோதிகள் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்திற்கு பிறகே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான கருத்துக்கள் வலுப்பெற்றது.

பத்திர்கை சுதந்திரத்திற்காக போராடும் ஒவ்வொருவருக்கும் இந்நாளில் யுனெஸ்கோ சார்பில் கிலேர்மோ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. சுமார் 14 நபர்கள் கொண்ட குழு ஒன்றால் சிறந்த பத்திரகை சுதந்திர போராளி ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 25 டாலர் மதிப்புடைய பரிசு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மகராஷ்டிரா முன்னோடியாக திகழ்கிறது. அங்கு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களை பாதுக்காக்கும் விதமான இச்சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அனைத்து பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...