மேட்டுப்பாளையம்- கோவை வழி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், ஒலி மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை விதித்தது. 



இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இன்னும் சில தனியார் பேருந்துகள், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் இவ்வகையான ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் ஆடியோ கருவிகளை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ தியாகராஜன் செவ்வாயன்று திடீர் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறி அதிக வேகமாக செல்லும் பேருந்துகள் மீதும், ஓட்டுநர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...