மாநகராட்சியின் தூய்மை விளம்பர பலகை மட்டும் இங்கே? வேலை பணிகள் எங்கே?


கோவை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற 'ஸ்வச் சர்வேக்சன் 2017' கோவை முதலிடம் பெறுவதற்கு கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. 


ஸ்மார்ட் சிட்டி குறித்து மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை மட்டும் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதால் வழக்கம்போல் கோவை மாநகரம் பழைய நிலைக்கு மாறியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.





கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் குப்பை மற்றும் சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீரினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போத்தனூர் ரயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலையில் சாக்கடை நீர் வழிந்த்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் தினத்தோறும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.




அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது. இதில் பத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்கும் இந்த நிலைமை மாறுவதற்கும் மாநகராட்சி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள். 







Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...