கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையை அடுத்த அன்னூர் கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் புதியதாக மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் அன்னூர்- சிறுமுகை சாலையில் இருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை, கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், புதிதாக மதுபானக்கடை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆயிரத்தும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் பெண்கள் மற்றும் உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க விடமாட்டோம் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...