ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் சுயஉதவிக் குழு பெண்களுக்கான அதிகாரம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம்

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி தொழில்நுட்பத் துறை சார்பில் "சுயஉதவிக் குழு பெண்களுக்கான அதிகாரம்" என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டனர்.



ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஜே.ஜேனட் நிகழ்வினை துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கு இச்சமூகத்தில் அனைத்துவிதமான உரிமைகளிலும் சமபங்கு உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த சமூகம் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுக்கென முன்னேற்றப்பாதையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் சுய வேலைவாய்ப்பின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவது பாராட்டுக்குறியது' என்றார்.

இதனைத்தொடர்ந்து, என்இஆர்டி சொசைட்டி தலைவர் சத்யஜோதி காமராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் பல துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இச்சமூகத்தில் சமஉரிமை உள்ளது என்றார். மேலும் அவர் பெண்களின் முன்னேற்றம், பெண்கள் சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகள், நபார்டு மூலம் பெண்களுக்கான வங்கிக் கடன், சுயஉதவிக் குழு பெண்களுக்கான அரசின் சிறப்புச் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில், என்இஆர்டி சொசைட்டியின் முதன்மை மேலாளர் முத்துக்கண்ணன், மேலாளர் சரஷ்வதி, கிருஷ்ணா வுட்டன் ஆர்ட்ஸ் என்.விஜயகுமார் மற்றும் கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கணினித் துறை தலைமை பேராசிரியர் எஸ்.ஜே.கே.ஜெகதீஷ்குமார் மற்றும் அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...