இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 6ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு


மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிவானந்த காலனி பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதியன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியர் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய பாஜக அரசு பல்வேறு வகையில் இந்தியை திணித்து வருகிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்த்து முதற்கட்டமாக வருகின்ற மே 6 ஆம் தேதியன்று கோவை மாவட்டம், சிவானந்த காலனி பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.

கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரை மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டது போல, தமிழகத்திலும் தமிழ் பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். மேலும், இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை கோவை மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளோம். இதனை தொடர் போராட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...