வால்பாறையில் கன மழை - மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு


வால்பாறை சுட்டுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் சுட்டுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில், முடீசில் உள்ள ஆறு மற்றும் முடீஸ் அருகே உள்ள தெப்பக்குளத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பலத்த சூறாவளிக்காற்று வீசியதில் முடீஸ் பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையம் அருகாமையில் சாலையோரம் இருந்த சுமார் 80 வருடம் பழமைவாய்ந்த மரம் வேருடன் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. தொடர்ந்து, அந்த மரம் சாலையில் விழுந்த நிலையில், அதன் அருகில் இருந்த இரண்டு மின் கம்பங்களும் காவல் நிலையத்தின் மீது விழுந்தது. அதிர்ஸ்டவசமாக இதில் எவ்வித உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை.



இதனைத்தொடர்ந்து, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், எஸ்டேட் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் இணைந்து அந்த மரத்தினை அகற்றினர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...