'பிரேமம்' திரைப்பட புகழ் நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணனும் திரைபட துறையில் களமிறங்குகிறார்.


பிரேமம் திரைப்பட புகழ் நடிகை சாய்பல்லவியின்  தங்கை பூஜா கண்ணனும் திரைபட துறையில் களமிறங்குகிறார்.மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி,படத்தின் வெற்றி மற்றும் அவரது நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாய் மலையாளத்தில் திரைபடங்களில் பிசியாக உள்ளார். மலையாளத்தில் தமிழ் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதன் முன்னோட்டமாக பூஜா கண்ணன் நாயகியாக நடித்த கரா என்ற குறும்படம் இன்று யுடியுப்பில் வெளியிடப்பட்டது. 

கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படத்தை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்த்தனர்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூஜா கண்ணன்,கோவையில்  தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்து வருவதாகவும் அக்கா சாய் பல்லவி சினிமா துறையில் இருப்பதை தொடர்ந்து தனக்கும் பட வாய்ப்புகள் வருவதாக கூறியவர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய பூஜா கண்ணன், நல்ல கதையுடன் கூடிய பட வாய்ப்புகள் வந்தால் தற்போதே படங்களில் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்தார்.கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த கரா குறும்படத்தை, ஆஜித் என்ற இளைஞர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...