குனியமுத்தூர் தடுப்பணை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் கோவையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த இரு வாரங்களாக வெள்ளலூர் குளத்தில் களப்பணியில் ஈடுபட்டு சீமைக்கருவேள மரங்களை அகற்றினர். தொடர்ந்து, கடந்த வாரங்களில் ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகளை அகற்றினர்.



தொடர்ந்து, இந்த வாரம் தூர்வாரும் பணியாக நமது கோவை நமது பசுமை, மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து இன்று குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் 12.5 கிலோமீட்டர் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது.



இதில், நான்கு குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் 12.5 கிலோமீட்டர் வாய்க்கால் தூர் வாரப்பட்டது. இப்பணிகளில் 150-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மூன்று ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...