கோவை- பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக பேருந்துகளை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கைது

கோவை- பொள்ளாச்சி  நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலையாக விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.



இதற்காக சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் சாலையின் இரு புறமும் கற்களை கொட்டி காங்கிரீட் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் குறுகிய சாலையில் செல்லும் தனியார் பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளுடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சாலையில் செல்வதால் அப்பேருந்தில் பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி அந்த சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகளும் தங்களது உயிரை பணயம் வைக்க வேண்டியுள்ளது.



இதனிடையே, கோவை- பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக பேருந்து ஓட்டிய தனியாா் பேருந்து ஓட்டுனர்கள் வைரமுத்து (42), நாகராஜ் (41) ஆகியோா் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் இன்று அவர்களை கைது செய்யதனர். மேலும், அந்த சாலையில் அதிவேகமாக சென்ற பத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை கிணத்துக்கடவு காவல் துறையினர் சிறை பிடித்தனர். தொடர்ந்து, அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேர்ட்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கோவை முதல் பொள்ளாச்சி வரையிலான பேருந்து போக்குவரத்து மிகவும் ஆபத்தான சாகசமாக உள்ளது. தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தங்களுக்குள் போட்டிபோட்டுக்கொண்டு பயணிகளின் உயிரில் விளையாடி வருகின்றனர். இதனால் கோவை- பொள்ளாச்சி சாலையில் விபத்து அன்றாடக்காட்சியாகி விட்டது. காவல்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அதிவேகமாக செல்லும் பேருந்து ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்வதோடு மட்டுமின்றி பேருந்துகளையும் ஜப்தி செய்ய வேண்டும்" என்றனர்.



இதனிடையே விலை உயர்ந்த இரண்டு கார்களில் பொள்ளாச்சி சாலை வழியாக அதிவேகமாக ஓட்டும் போட்டியில் இருவர் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த கார் ஓட்டுனர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...