ஏப்.30 அன்று இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்


கடந்த 2017 ஏப்ரல் 2ம் தேதியன்று நடைபெற்ற முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 3.29 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது, வரும் ஏப்ரல் 30-ம் தேதியன்று (ஞாயிறு) இரண்டாம் தவணை சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1182 மையங்களும், நகர்புறங்களில் 399 மையங்களும் என 1581 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஐந்து வயதிற்கு உட்பட்ட 3.3 லட்சம் குழந்தைகள் பயன்பெறவுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 1629 ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க 34 மையங்கள் மற்றும் 24 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இம்முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டு முகாமில் வழங்க தயார் நிலையில் உள்ளது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத் துறை அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 6536 பணியாளர்கள் பணியாற்றவுள்ளனர். இப்பணிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஏற்கனவே பாலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம் நாளான ஏப்ரல் 30ம் தேதியன்று தவறாமல் போலியோ சொட்ட மருந்து அளிக்க கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...