தீக்கதிர் நாளிதழ் நடத்தும் அடுத்து என்ன ? மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தீக்கதிர் நாளிதழ் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் ஏப்ரல் 28ம் தேதியன்று (இன்று) நடைபெறுகிறது. இதில் கல்வியாளர்கள், தொழில்துறை நிபுனர்கள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு மேற்படிப்பு குறித்து வழிகாட்டுகின்றனர்.

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் உயர்க் கல்வி படிப்பதற்கு எதை படிப்பது ?, என்ன படிப்பது ? என்றும், கல்விக்கடனை வங்கியில் எப்படி பெருவது என்பது குறித்து சக மாணவர்களோடும், பெற்றோர்களோடும் கலந்துரையாடி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை உணர்ந்து தீக்கதிர் நாளிதழ் சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வடகோவையில் உள்ள குஜராத் சமாஜ் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதில், முன்னாள் கல்வி அமைச்சரும், மாபாய் பயிற்சி மையத்தின் நிறுவனருமான க.பாண்டியராஜன், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், கல்வியாளர் டி.நெடுஞ்சழியன், கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ஜே.வணங்காமுடி, அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் கணேஷ் ஆகியோர் பங்கேற்று உயர்கல்வியும், வேலை வாய்ப்பும், வரவேற்க காத்திருக்கும் எதிர்காலம், அனைவரும் பெறலாம் கல்விக்கடன், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அனுமதி இலவசமாய் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...