அறம் அறக்கட்டளை சார்பில் சின்மையா வித்யாலயா பள்ளி குழந்தைகளுக்கு தற்காப்புப் பயிற்சி

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அறம் அறக்கட்டளை சார்பில் வடவள்ளியில் செயல்பட்டு வரும் சின்மையா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான தற்காப்புப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் அப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 110 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியினை விவேக் மற்றும் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். மேலும், இதில் தற்காப்புப் பயிற்சிகள் மட்டுமின்றி குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை கண்டறிவது குறித்தும் கற்றுத்தரப்பட்டது.



குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு, கடத்தல், கொலை உள்ளிட்ட தற்போதைய சமூகச் சூழலில் பெருகி வரும் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.



மேலும், தேர்வில் தோல்வி கண்டு தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவைகளில் இருந்து மாணவர்கள் எவ்வாறு விடுபட்டு தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற வேண்டும் என்பன குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...