ஆனைகட்டி அருகே மண் சகதியில் சிக்கி பெண் காட்டு யானை பலி


கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே அமைந்துள்ளது செம்பிக்கரை கிராமம். அடர்ந்த வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் நீர் மற்றும் உணவுக்காக காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக செம்பிக்கரையில் உள்ள நீர் குட்டைக்கு வந்துள்ளது. அப்போது குட்டையில் இருந்த நீர் வறண்டு மண் சகதியாக இருந்த நிலையில் யானை அதில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகன உதவியுடன் யானையின் உடலை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனைகட்டி பகுதியிலேயே தண்ணீர் தேடி வந்த யானை உயிரிழந்தது. தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் உள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...