அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை நீதிமன்றத்தின் கிழக்கு நுழைவாயிலில் கோவை மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியால் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகம் எங்கும் வழக்கறிஞர்களாக தொழில் செய்து வருகின்ற வழக்கறிஞர்கள் தங்களுடைய நியமான கோரிக்கைகள் எடுத்து சொல்லி போராடிய நேரங்களில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, இன்று அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியால் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.



குறிப்பாக, 25 வழக்கறிஞர்கள் மீது வாழ்நாள் முழுதும் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதையெல்லாம் கண்டிக்கின்ற வகையிலும், அவர்கள் உரிமைகள் பாதுகாக்கின்ற வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டு நடவடிக்கை அறிவிற்புக்கேற்ப கோவையில் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என அவர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...