உதகை குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளிக்கு சி.ஐ.எஸ் சர்வதேச அங்கிகாரம்


நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் முதலிடம் வகிக்கும் குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.



குறிப்பாக துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் ஆண்டு தோறும் இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

மேலும், இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே உதகை குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது. பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சுடும் உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் அனைத்து பயிற்சிகளும் சிறந்த முறையில் அளிக்கப்படும் நிலையில் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளும் உள்ளதால், இந்தியாவில் உள்ள சிறந்த சர்வேதேச பள்ளிகளில் குட்செப்பர்டு சர்வதேச பள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அளவில் முதல் சர்வதேச பள்ளியாக (கவுன்சில் ஆப்இன்டர் நேசனல் பள்ளி) சி.ஐ.எஸ் சர்வதேச சான்றிதழ் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய புதுமையான கல்வி முறையை இப்பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக பயில இவ்விருது வழி வகை செய்யும் என குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இந்த சர்வதேச அங்கிகாரம் பெற்றிருப்பதன் மூலம் சுதந்திரமான உலகளாவிய கல்வி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் திறம்பட கல்வி முறைகளை புதுப்பிக்கவும் முடியும்.

உலகத் தரமான கல்வி சர்வதேச திட்டங்களை இப்பள்ளி வழங்கும். 2010 ஆண்டில் இருந்து சி.ஐ.எஸ்-யில் உறுப்பினராக உள்ள குட்செப்ர்டு சர்வதேச பள்ளி இந்த சர்வதேச அங்கிகாரம் பெற மூன்று ஆண்டுகள் ஆனது. பல்வேறு சிறப்பான ஆய்வுகளுக்கு பிறகு சர்வதேச தர அங்கீகாரம் பெற்று குட்செப்பர்டு பள்ளி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...