ஜெ.வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொலை

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொவை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா அவ்வப்போது ஓய்வு எடுக்க இந்த எஸ்டேட் வருவது வழக்கம். அவரது மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டை காவலாளிகள் மட்டுமே கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார். மற்றோரு காவலாளியான கிஷன் பகதூரும் படுகாயம் அடைந்தார். காவலாளிகள் இருவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.

நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் பகதூரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கிஷன் பகதூரை கட்டிப் போட்டுவிட்டுச் சென்றதாகவும் கொடநாடு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவன் மறைவுக்குப் பின்பு அதிமுக-வில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. மேலும், இந்த கொடநாடு எஸ்டேட்டையும் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தினகரன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த கொலை, கொள்ளை முயற்சியின் போது நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என டிஐஜி தீபக் எம். தாமர் தலைமையில் 5 டிஎஸ்பி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...