கோவை TNAU-வில் நோனி, தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை TNAU-வில் ஆகஸ்ட் 13, 14 தேதிகளில் நோனி, தக்காளி மற்றும் பப்பாளியில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் ரூ.1,770 கட்டணம் செலுத்த வேண்டும்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) இன்று (ஆகஸ்ட் 9) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, நோனி, தக்காளி மற்றும் பப்பாளி பழங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் நோனி பிளைன், குவாஷ், ஊறுகாய், ஜாம், தக்காளி சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, பப்பாளி ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி ஆகியவற்றை தயாரிக்க கற்றுக் கொடுக்கப்படும். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 ஆகும். பேருந்து நிறுத்தம் வாயில் எண் 7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003 என்ற முகவரியிலோ அல்லது 94885-18268, 0422-6611268 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என TNAU தெரிவித்துள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...