நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு தனியார் நீர் விநியோக லாரி உரிமையாளர்கள் ஆதரவு

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 25) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாடுதழுவிய வேலைநிறுத்தம் மற்றும் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது தனியார் நீர் விநியோக லாரி உரிமையாளர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

லாரி உரிமையாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவர். எனவே மக்கள் முன்கூட்டியே நீரினை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...